உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதா ஆசிரமத்தில் ரதோற்சவம்

சாரதா ஆசிரமத்தில் ரதோற்சவம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதா தேவியின் 166ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி ரதோற்சவம் மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது.

உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதாதேவியின் 166ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. விழா, நேற்று அதிகாலை 4:45 மணியளவில் மங்கல ஆர்த்தியும், சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை 5:15 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. 8:00 மணியளவில் சாரதாதேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரதோற்சவ பஜனை நடந்தது.ரதோற்சவத்தை சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

10:30 மணியளவில் வேதபாராயணம், அர்ச்சனை நடந்தது. 11:00 மணியளவில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து நித்திய விவேக பிரியா அம்பா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக பிரம்மச்சாரணி யாக்ன பிரணமா மாஜி சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !