கசவனம்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2132 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு அலங்காரம், தேவார, திருவாசக பாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. ஏராள மான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆலத்துாரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.