வடபழனி முருகன் கோவிலில் நகர சங்கீர்த்தனையில் குழந்தைகள் ஆர்வம்
சென்னை : சென்னை, வடபழனி முருகன் கோவிலில், மார்கழி மாத அதிகாலை நகரசங்கீர் த்தன நிகழ்ச்சியில், குழந்தைகளும் ஆர்வமுடன் பக்திப்பாடல்களை பாடிவருகின்றனர்.
வடபழநி முருகன் கோவில், இந்தாண்டு மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து, நகரசங்கீர்த் தனம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, தெய்வங் களுக்கே உரிய மார்கழி மாதத்தில், பனிவிலகாத, சூரியன் கண்விழிக்காத அதிகாலை நேரத் தில், குளித்து, நெற்றியில் திருநீறிட்டு, இறைவனின் திருவீதியை வலம் வந்து, அவன் திரு நாமத்தைப் பாடினால், கூடாத நற்பலனும் கைகூடும் என்பர். அந்தவகையில், வடபழநி ஆண்டவர் கோவிலின், திருவீதிகளில், திருவெம்பாவை, திருப்புகழ் மற்றும் பக்திப்பாடல் களை பாடியபடி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதில், குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, அக்குழந்தைகள் கூறுகை யில், ’அதிகாலையில் எழுந்து குளிப்பதால், குளிர் விலகுகிறது. ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசிப்பதால், உடல் புத்துணர்ச்சியடைகிறது. பாடல்களை பாடுவதால், மனம் ஒருநிலை பட்டு, மனப்பாடம் செய்யும் சக்தி அதிகரிக்கிறது’ என்றனர்.