உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

காரைக்கால் தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி  தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள புனித தேற்ற ரவு அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் 24ல் இரவு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

நள்ளிரவு 12.00 மணிக்கு தேவாலயத்தில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி  தத்ரூபமாக காண்பிக்கப் பட்டது.அதையடுத்து, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை  விளக்கும் வகையில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை பங்குத்தந்தை ஏந்தி  வந்து, குடிலில் வைத்தார். சிறப்பு திருப்பலி நடைபெற்றது.காமராஜர் சாலையில்  உள்ள அந்தோணியார் ஆலயம், தருமபுரம் செபஸ்தியார் ஆலயம், கோட்டுச்சேரி  குரும்பகரம், நல்லாத்தூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !