பூமிக்குள் இருந்து மேலே வந்தவர்
ADDED :2215 days ago
ஸ்ரீரங்கத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த மகான் ராமானுஜர். இத்தலத்திலேயே அவர் மோட்சமும் அடைந்தார். அவரது பூதவுடலை பத்மாசனத்தில் அமர வைத்து சீடர்கள் அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். அவரே ஸ்ரீரங்கம் கோயிலில் தனி சன்னதியில் காட்சி தருகிறார். இவரை பார்த்தால் மயிர்க்கூச்செறியும் அளவுக்கு திருமேனி தத்ரூபமாக இருக்கும். திருமஞ்சனம் என்னும் அபி÷åPம் செய்வதில்லை. சித்திரை மாத திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த கலவையை மட்டும் சாத்துவர்.