உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்ஷய திரிதியை முன்னிட்டு கங்கோத்ரி கோவில் நாளை திறப்பு

அக்ஷய திரிதியை முன்னிட்டு கங்கோத்ரி கோவில் நாளை திறப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி கோவில் அக்ஷய திரிதியைத் திருநாளையொட்டி நாளை திறக்கப்படுகிறது.


இமய மலையில் உள்ள நான்கு சார்தாம் கோயில்களில் கங்கோத்ரியும் ஒன்று. ஆண்டுதோறும் குளிர் காலத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கங்கோத்ரி கோவில் மூடப்படும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் அதிக பனி படர்ந்து இருக்கும். சிறப்பு மிக்க இந்த கங்கோத்ரி தாம் அக்ஷய திரிதியைத் திருநாளையொட்டி,  நாளை முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ளன; யமுனோத்ரியுடன் இணைந்து, இது 2026-ஆம் ஆண்டிற்கான சார் தாம் யாத்திரையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !