சனி என்றாலே மக்கள் பயப்படுவது ஏன்
ADDED :2201 days ago
ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டு எடுத்துக் கொள்கிறது சனி. மேலும் நமது ராசிக்கு முன்னுள்ள ராசியில் இரண்டரை ஆண்டு, பின்னுள்ள ராசியில் இரண்டரை ஆண்டு என மொத்தம் ஏழரை ஆண்டு சனியின் கட்டுப்பாட்டில் ஒரு மனிதன் இருக்க வேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் துன்பம் ஏற்படுவதற்கு முற்பிறவிகளில் செய்த பாவங்களே காரணம். இதை உணர்ந்தால் பாவம் செய்யும் எண்ணம் மறையும். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரரை தரிசிப்பது நல்லது.