சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2098 days ago
குமாரபாளையம்: மார்கழி பிரதோஷத்தையொட்டி, குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்க, பக்தர்கள் சுவாமியை பல்லக்கில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்தனர். இதேபோல், கோட்டைமேடு கைலாசநாதர், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர், சவுண்டம்மன், கள்ளிபாளையம் சிவன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.