நான் அசைந்தால்...
ADDED :2108 days ago
உலக இயக்கத்தின் உயிர்த்துடிப்பாக இருப்பவர் சிவன். சதாசர்வ காலம் இடை விடாமல் ஆடிக் கொண்டே உலகத்தை இயக்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை நடனத்தி்ன் போது நடத்துகிறார். இதனை ‘பஞ்ச கிருத்தியம்’ என்பர். நடராஜர் அசைந்தாடுவதால் தான் அணு முதல் ஆகாயம் வரை அனைத்தும் அசைந்து இயங்குகிறது.