வாழ்வு தரும் காயத்ரி
ADDED :2123 days ago
“உலகின் இருளைப் போக்கி ஆத்ம பலத்தை தரும் ஒளிமயமான சக்தி எதுவோ அதனை நமஸ்கரிப்போமாக!” என ரிக் வேதம் சூரியனை போற்றுகிறது. காசிப முனிவரின் மகனான சூரியன், வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வான மண்டலத்தில் பவனி வருவதால், ‘சப்தாஸ்தவன்’ எனப்படுகிறார். சூரியனின் ஒற்றைச் சக்கரத் தேருக்கு கருடனின் சகோதரனான மாதலியே தேரோட்டியாக இருக்கிறார். காயத்ரி மந்திரத்தின் மூலம் ஆற்றல் பெற்றே சூரியன் அக்னி பந்தாக வானில் வலம் வருகிறார்.