புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி
ADDED :2419 days ago
நாடு முழுவதும் புனிதமான கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை தரிசிக்க நம் வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் நிறைய உண்டு. இவற்றில் நீராடவும் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி பசுவை வணங்குவது தான். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகளும் அடங்கியுள்ளன. பசுவை வலம் வந்து வணங்கினால் உலகை சுற்றி வந்த புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.