அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் நிகழ்ச்சி
ADDED :2187 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவடைந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில், நடைபெற்று வந்த திருவூடல் உற்சவம் நிறைவடைந்தது. விழாவை யொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலில் நடைபெற்ற ‘‘மறுவூடல்’’ நிகழ்ச்சியில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.