கீழ்வேளூர் அட்சய தாண்டவம்
ADDED :2244 days ago
நாகப்பட்டினம் - திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூரில், பெருமான் பத்து கர ங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும்.பிரம்மனும் லட்சுமியும் கரத் தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணு கானம் இசைக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபா முத்திரையும் கண்டுகளிக்கின்றனர். இதை சந்தியா தாண்டவம் எனவும் அழைக்கின்றனர்.