பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 10ம் ஆண்டு அன்னதானம்
ADDED :2129 days ago
திண்டுக்கல், பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக்குழு சார்பாக 10ம் ஆண்டு அன்னதானம் நடக்கிறது.பிப்.4ல் திண்டுக்கல்லில் அரசு பஸ் பணிமனை அருகிலும், பிப்.5,6ல் ஒட்டன்சத்திரம் எல்.என்.திருமண மண்டபத்திலும் அன்னதானம் நடக்கிறது. பிப்.5 மாலையில் பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடும், பிப். 6 காலையில் வேல் பூஜை, வேல் மாறல் பாராயணமும் நடக்கிறது.காலை 10:00 மணி வரை சிற்றுண்டி, 12:00 மணிக்கு உணவும் வழங்கப்படும். பங்கேற்க, சேவை செய்ய விரும்புவோர் 99443 09719, 98421 98889 ல் தொடர்பு கொள்ளலாம்.