உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பெற்ற கோயில் இது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புடையது. இக்கோயிலில் நேற்று (பிப் 27ல்) மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !