சில கோயில்களை மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் சிறப்புடையது என்பது ஏன்?
ADDED :2059 days ago
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் விசேஷமாக அமைந்த கோயில்கள் ‘மகா க்ஷேத்திரம்’ எனப்படும். மூர்த்தி – சுவாமி, தலம் – தலவிருட்சம். தீர்த்தம் – அக்கோயிலின் குளம். எடுத்துக்காட்டாக மதுரையில் மூர்த்தி – மீனாட்சி சுந்தரேஸ்வரர், தலவிருட்சம் – கடம்ப மரம், தீர்த்தம் – பொற்றாமரைக்குளம் மூன்றும் சிறப்புடன் திகழ்கின்றன.