கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து வழிபடுவது ஏன்?
ADDED :2213 days ago
அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை ‘அசுவத்த நாராயணர்’ என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, ‘அ”வத்த விவாஹம்’ எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.