ஏகாம்பரநாதர் பங்குனி திருவிழா 28ல் துவக்கம்
                              ADDED :2055 days ago 
                            
                          
                          காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வரும், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வரும், 28ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 7:00 - 8:00 மணிக்குள், கொடியேற்றப்படுகிறது. ஏப்., 10ம் தேதி, பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.