யாரை 4 முறை வலம் வரவேண்டும்?
ADDED :5109 days ago
கோயிலில் வழிபடுவோர் நீராடி, அன்பு உள்ளத்துடனும், ஆசாரமுடனும் கோயிலுக்குச் செல்ல வேண்டும், கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்க வேண்டும். உள் பிரகாரங்களில் விழுந்து வணங்கக்கூடாது, விநாயகரை ஒரு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வர வேண்டும். இவ்வாறு சொல்லியிருப்பவர் வாரியார் சுவாமிகள்.