சங்கப்புலவர் மாங்குடி மருதனாருக்கு அரசு சார்பில் மரியாதை
ADDED :2026 days ago
திருநெல்வேலி:சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவு துாணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.சங்கப்புலவர்களில் ஒருவரான மாங்குடி மருதனார், சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் பிறந்தவர். அவர் இயற்றிய 13 பாடல்கள் சங்கப்பாடல்கள் தொகுப்பில் உள்ளன. பத்துப்பாட்டுகளில் ஒன்றான மதுரைக்காஞ்சியை இயுற்றியவர்.