முருகன் குறித்த பழமொழிகள்
ADDED :1976 days ago
* வேலை வணங்குவதே வேலை.
* சுக்குக்கு மிஞ்சிய மருந்துமிமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
* வயலுார் இருக்க அயலுார் எதற்கு?
* அப்பனைப் பாடிய வாயால் ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
* சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
* கந்த புராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
* கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
* செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
* திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
* வடிவேல் இருக்க வஞ்சகமில்லை
* வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
* செட்டிக் கப்பலுக்குச் செந்துாரான் துணை.
* கந்தன் பாதம் கனவிலும் காக்கும்