கேரளாவில் இறந்த யானைக்கு திருவண்ணாமலையில் கஜமோட்ச தீபம்
ADDED :2227 days ago
திருவண்ணாமலை : கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதியில் உணவு தேடி வெளியே வந்த 15 வயது கர்ப்பம் தரித்த யானை, வெடிமருந்து நிரம்பிய அன்னாசி பழத்தைச் சாப்பிட்டு இறந்தது. இறந்த யானைக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கஜமோட்சதீபம் ஏற்றி வழிப்பட்டனர்.