உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர நாராயண சுவாமி கோவிலில் அஷ்டமி வழிபாடு

சங்கர நாராயண சுவாமி கோவிலில் அஷ்டமி வழிபாடு

மதுரை: வைகாசி  மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சங்கர நாராயண சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அலங்கார வழிபாடு கால பைரவர்   சுவாமிக்கு  நடைபெற்றது.

மதுரை   மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம், சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அலங்கார வழிபாடு,  நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது,   பக்தர்களுக்கு அனுமதியின்றி பூஜை நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி சந்தனக் காப்பு  சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார். ரமேஷ் அய்யர்,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !