கோட்டை மாரியம்மனை தரிசித்தால் நோய் தீரும்!
ADDED :22 minutes ago
நோய் தீர... திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை தரிசிப்போம்.
300 ஆண்டுக்கு முன் திண்டுக்கல் மலைக் கோட்டையில் போர் வீரர் சிலர் மாரியம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் இவள் திண்டுக்கல்லின் காவல் தெய்வமாக திகழ்கிறாள். இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி தியான கோலத்தில் இருக்கிறாள்.
நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கவும் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், அரிவாள், வில், மணி, குங்குமக் கிண்ணம் ஏந்தி இருக்கிறாள். நோய்கள் தீர வேண்டும் என மஞ்சள், உப்பை காணிக்கை தருகின்றனர்.
எப்படி செல்வது: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி; மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 94444 02440, 0451 – 242 7267