பெயர் சொன்னால் என்னாகும்?
விளக்கம் தருகிறார் வியாசர்
* கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
* தர்மம் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும்.
* லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுபடுத்துவது அவசியம்.
* பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியாக இருப்பவனும் முட்டாள் ஆகி விடுவான்.
* புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடும்.
* தர்மத்தில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் மற்ற எதிலும் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படாது.
* தர்மத்தை முழுமையாக ஏற்று பின்பற்றுவதே கல்வி கற்றதன் அடையாளம்.
* வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே.
* தர்ம வழியில் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு வேதம் விதித்தபடி வாழ்வு நடத்துங்கள்.
* தேவையற்ற பேச்சால் நேரம் வீணாவதோடு திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியாது.
* கவலையில் மனதைச் செலுத்தாமல் பயனுள்ள விஷயத்தில் மட்டும் ஈடுபடுவது நல்லது.
* எப்போதும் கடவுளின் திருநாமத்தை ஜபிப்பவர்களுக்கு ஒரு குறையும் ஏற்படாது.
* கடவுளுக்கு நிவேதனம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது புண்ணியமாகும்.
* உயிருடன் இருக்கும்வரை ஒருவருடைய பிறவிக்குணம் அவரை விட்டு நீங்காது.
* கடும் நியமங்கள் கொண்டதாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.