விழுப்புரம் கோணம்மாள் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :12 minutes ago
விழுப்புரம்: கோணம்மாள் அம்மனுக்கு சாகைவார்த்தல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வளவனுார் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள கோணம்மாள் அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா கடந்த 3ம் கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதலும், அன்னதானம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கரகம் ஜோடித்து புதுக்குளத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரகம் வீதியுலா வந்தது. இதில், ஏராளமான பெண்கள் கூழ் குடத்துடன் ஊர்வலமாக வந்து, மதியம் 1:00 மணிக்கு கோவிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், இரவு 7:00 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது.