ஒரே லிங்கத்திற்குள் ஆயிரம் லிங்கங்கள்!
ADDED :1975 days ago
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மரம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மரத்தின் அருகிலுள்ள லிங்கத்தின் மீது வரிசைக்கு 50 வீதம் 20 வரிசைகளில் 1000 லிங்கங்கள் பொறிக்கப் பட்டுள்ளது. இதே போன்ற லிங்கம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் உள்ளது.