உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் ஆடிபூர விழா

சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் ஆடிபூர விழா

மதுரை:  சங்கரலிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு,  நேற்று கோமதி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை அலங்கார அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை  மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் கோமதி அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா  நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும்  முகக் கவசம் அணிந்து,  சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர். முன்னதாக கோமதி அம்மனுக்கு,  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,   திருநீர் அபிஷேகம் நடைபெற்றது.  வண்ண, வண்ண வளையல்களுடன் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு, காட்சி அளித்தார். பக்தர்கள் அனைவரும் அம்மன் பக்தி கவசம்,  சிவபுராணம்,  கோளறு பதிகம்,  லிங்காஷ்டகம், வேதசாம புராண  பாடல்கள்  பாடினார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், பஞ்சாமிர்தம், பால், பிரசாதம் வழங்கப்பட்டது. ரமஷே் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை  நிர்வாகிகள் பூஜைக்கான  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !