தியானம், பாராயணம் – கடவுளுக்கு விருப்பமான எது?
ADDED :2001 days ago
அருளாளர்களால் பாடப்பட்ட பாடல்களை வாய்விட்டு சொல்வது பாராயணம். உ.ம். விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம். இவற்றை கண்களை மூடி மனதிற்குள் உருவேற்றுவது தியானம். இரண்டிலும் மனம் ஒன்றி ஈடுபடுவது அவசியம். பக்தியுடன் செய்தால் இரண்டும் கடவுளுக்கு விருப்பமானதே.