உலகம் நலம் பெற வேண்டும்
 * உலகமே நலம் பெற வேண்டும் என தினமும் வழிபாடு நடத்துங்கள். 
* தைரியமே உற்ற துணை. எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு உண்டு.       
* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை துன்பம் தொடர்ந்திடும். 
* இயன்ற உதவிகளை யாருக்கும் மறுப்பது கூடாது.
* நல்லவர்களின் மனம் நோகும் விதத்தில் நடக்கக் கூடாது.       
* தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொன்னாலும் குற்றமாகாது. 
* சுயநலம் கொண்டவன் எதைச் செய்தாலும் அது பாவம் தான்.       
* ஆபத்து நேரத்தில் கை கொடுப்பதும், இடித்துச் சொல்லி திருத்துபவனே நல்ல நண்பன்.      
* கடவுள் மீது பக்தி செலுத்தவே மனிதர்களாக பூமியில் பிறந்திருக்கிறோம்.
* நம் பிறப்புக்கு காரணமான பெற்றோரே நம் முதல் தெய்வங்கள். 
* உடல் மட்டுமின்றி உள்ளமும் துாய்மை பெற விரதமிருங்கள். 
* விதியின் கடுமை குறைய வழிபாடு உதவும். ஆனால் விதியை யாராலும் வெல்ல முடியாது. 
* இன்பம் வந்தால் மனிதன், கடவுளை மறந்து ஆணவத்துடன் அலைகிறான். 
* ஆபத்து நேரத்தில் அதிலிருந்து தப்பிக்க எதைச் செய்தாலும் தவறாகாது. 
* மனிதன் தனக்குரிய கடமையைச் சரிவரச் செய்வது தர்மம்.
* கடமை தவறுவது, செய்யாமல் புறக்கணிப்பது, அதை மறப்பது அதர்மம்.