புகழ்ச்சிக்கு மயங்காதீர்
 * புயலுக்கு அசையாத பாறை போல புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள்.  
* தன்னை அறிந்தவன் வெற்றி, தோல்வி எது வந்தாலும் தலை வணங்காமல் வாழலாம்.  
* மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி.
* ஆசையை ஒழித்தால் தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை.  
* எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பதே பண்பட்ட மனிதனின் அடையாளம்.
* தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாகும். 
 * அடக்கம் இன்றி நுாறு ஆண்டுகள் வாழ்வதை விட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.
*  மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.
* உங்களுடைய வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல. 
* பொய்யைத் திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம். 
* தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து வருந்துவது அறிவுடைமையாகாது.
*  தீமைகளில் இருந்து விடுவிப்பதோடு, நன்மை அளிக்கும் உண்மையை பரப்ப உறுதி கொள்ளுங்கள்.
* விழிப்புடன் செயல்படுங்கள். சுமைகளில் இருந்து விடுபடுவீர்கள். 
* உணர்வுடன் இருப்பதோடு அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* நல்லவர்கள் இமயமலை போல தொலைவில் இருந்தே காண்போருக்கு மகிழ்ச்சியளிப்பர்.