திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை விழா
ADDED :1915 days ago
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத கார்த்திகை விழா நடந்தது. முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. கோயில் வாசலிலேயே கற்பூரம் ஏற்றி சுவாமி கும்பிட்டு சென்றனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் வெளி பிரகாரத்தில் நின்று தரிசனம் செய்தனர்.