பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்
ADDED :1881 days ago
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.
கொரோனா ஊரடங்கால் கோயிலில் பக்தர்கள் அனுமதியின்றி ஆக.13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. காலையில் வெள்ளிக்கேடகத்திலும் இரவில் மூஷிக வாகனத்திலும் சுவாமி பிரகாரம் வலம் வருதல் நடந்தது.தேரோட்டம், சந்தனக்காப்பு,கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது.
ஆறாம் திருநாளை முன்னிட்டு கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு கோயிலினுள் மூலவர் சன்னதிக்கு முன்பாக சண்டிகேஸ்வரருடன், வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அடுத்து யானை முகத்தாலான அசுரனை விநாயகர் தனது தந்தத்தால்குத்தி வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம்வைபவத்தை சிவாச்சார்யர்கள் நிகழ்த்தினர். பின்னர் தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர்அருள்பாலித்தார்.வழக்கமாக பக்தர்கள் ஆர்ப்பரிப்புடன் கோயில் குளத்து வடகரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் இம்முறை கோயில் மண்டபத்தினுள் பக்தர்கள் கூட்டமின்றி நடந்தது.