விநாயகர் சிலை வடிக்க உதவிய ஆன்மிகமலர்
ADDED :2029 days ago
கன்னிவாடி; திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி அருகே பழைய கன்னிவாடியை சேர்ந்த மாணவர்கள்அன்பரசன் 12, தீனதயாளன் 14. இருவரும் சதுர்த்தி வழிபாட்டிற்காக, தினமலர் ஆன்மிகமலர் புத்தகத்தில் உள்ள விநாயகர் படங்களைக் பார்த்து களிமண் சிலை செய்தனர்.இருவரும் கூறுகையில், வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ள தினமலர் ஆன்மிகமலர் உதவியது. சதுர்த்திக்கு விநாயகரை வைத்து வழிபட, ஆன்மிக மலர் புத்தக படங்களைக் கொண்டு சிலைகளை தயாரித்தோம், என்றனர்.