உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டி பூஜை: வேல் பூஜை செய்த பக்தர்கள்

சஷ்டி பூஜை: வேல் பூஜை செய்த பக்தர்கள்

திருவாடானை: திருவாடானை, ஆந்தகுடி, நம்புதாளையில்உள்ள ஹிந்து கடவுள் முருகன் கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள்,பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்களும்,தீபாராதனைகளும் நடந்தது. சஷ்டியை முன்னிட்டு, வீடுகளிலும் பக்தர்கள் வேல் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

 ஆர்.எஸ்.மங்கலம்: சஷ்டியை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவில் சுப்பிரமணியர் சன்னதியில் ஹிந்து கடவுள் முருகனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. பின்பு நடைபெற்ற சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !