உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்வில் அமைதியைத் தேடு

வாழ்வில் அமைதியைத் தேடு

* தேவைகளை குறைத்துக் கொண்டு நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு.   
* தினமும் அதிகாலையில் தியானம் செய்வதை வழக்கமாக கொள்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மவழியில் செலவிடு.
* பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படித்திடு.
* தினமும் இரண்டு மணி நேரம், சாப்பிடும் போதும் மவுனத்தை கடைபிடி.
* எந்த நிலையிலும் உண்மை பேசுவதில் உறுதியாக இரு. .
* மற்றவர் உணர்ச்சிகளை புண்படுத்தாமல் அனைவரிடமும் அன்பு காட்டு.  
* தவறால் கிடைத்த அனுபவத்தை மறக்காதே. உன்னையே நீயே திருத்திக் கொள்.  
* துாங்கும் முன்பும், துாங்கி எழுந்த பின்பும் கடவுளை மனதார நினை.
* எண்ணம், சொல், செயலில் எவருக்கும் துன்பம் செய்யாதே.
* அநியாய வழியில் கிடைத்த பணம், பொருளை ஏற்காதே.
* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மையால் கோபத்தைக் கட்டுப்படுத்து.  
* கடவுள் நம்மை விட்டு அகலாத உயிர்த்தோழனாக இருக்கிறார்.           
* வழிப்போக்கனைப் போல உலகில் வாழ்ந்தால் ஆசைகள் குறைய தொடங்கும்.  
* ஆசைகளை குறைக்க பழகினால் கடவுளை எளிதாக அடையலாம்.        
* பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். பகைவரையும் நேசி.  
* தேவையை குறைத்துக் கொண்டு திருப்தியுடன் வாழ்.  
* தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடு.
* நேர்மையை உயிராக போற்று. உழைப்பால் கிடைத்த பணத்தில் வாழ்வு நடத்து. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !