மஞ்சள் விற்ற சப்தமாதர்!
ADDED :2142 days ago
திருச்சி, லால்குடியை அடுத்த மணக்கால் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சப்த மாதர் கோயில். இவர்களை மணக்காயி அம்மன் என்றும் அழைக்கின்றனர். வணிகர் ஒருவர் மஞ்சள் வியாபாரம் செய்தவற்காக ஊர் ஊராகச் சென்ற போது சப்தமாதர்களும் ஏழு பெண்களாக அவருடன் வந்து மஞ்சள் ஆற்றங்கரையில் அவர்களுக்கு கோயில் அமைத்து அந்த வணிகள் வழிபட்டார் என்கிறது தலவரலாறு. சிவன்கோயில்களில் வடக்கு நோக்கி அருளும் சப்தமாதர்கள் இங்கு கிழக்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷம்!