நால்வர் பிறந்த ரகசியம்
ADDED :1855 days ago
அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக கிடைத்த பாயாசத்தை குடித்ததால், மகாராணிகளான கோசலைக்கு ராமனும், கைகேயியிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். இந்த நால்வரின் பிறப்புக்கு சாஸ்திர ரீதியாக காரணம் ஒன்றுண்டு.
ஒரு மகன் மட்டும் பெற்றால் அவன் கயா ேக்ஷத்திரத்தில் தன் காலத்திற்குப் பிறகு பிதுர் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒரு மகன் இல்லாவிட்டால் இன்னொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என நினைத்தார். அதற்காகவே ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள் இருக்கட்டும் என அவர் முடிவெடுத்தார்.