உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகமே உன் காலடியில்!

உலகமே உன் காலடியில்!


உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்

* குறிக்கோள் நோக்கி விரைந்தோடு. உலகமே உன் காலடியில்!
* உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெற நீ வந்திருக்கிறாய்.  
* ஒவ்வொரு மனிதனும் சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும்.  
* உன்னிடம் உள்ள மிருக சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்று.  
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்; அதில் மனதை ஒருமுகப்படுத்து.   
* உறுதியுடன் போராடினால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகும்.
* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நீ தான் உனக்கு நீதிபதி.
* கத்தி முனையில் நடப்பது போல வாழ்வு கடினமானது. நம்பிக்கை இழக்காதே.
* எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராமல் பாடுபாடு.
* உழைப்பு இன்றி செயல் நிறைவேறாது. உழைப்பு ஒன்றே உயர்த்தும்.       
* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்.        
* சுயநலத்தை மறந்தவன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான்.      
* தலைவனாக இருப்பதை விட சேவகனாக இருந்து தொண்டாற்றுவது மேல்.         
* தியாகம் செய்ய தயாராக இருந்தால் மற்றவர் இதயத்தை வெல்லலாம்.
* எல்லாத் தீமைகளையும் எதிர்த்து போராடு. அனைவரிடமும் அன்பு காட்டு.  
* சில நேரங்களில் இன்பத்தை விடத் துன்பமே சிறந்த ஆசிரியராக உள்ளது.    
* பசியால் வாடுவோரிடம் ஆன்மிகம் பேசுவது அவமதிப்பான செயல்.  
* உயிர் போகும் வரை கடமையில் இருந்து விலக வேண்டாம்.
* தீய ஆசைகளில் சிக்கினால் அற்ப புழு போல இறக்க நேரிடும்.  
* பண்புள்ளனாக வாழ கற்றுக்கொள். பின்னர் பிறரை பண்புள்ளவனாக மாற்று.   
* உனக்குள் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது. அதை வெளிக்கொண்டு வா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !