உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!


எச்சரிக்கிறார் அரவிந்தர்

* அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.  
* கடவுளை அடைய பக்தி ஒன்றே சிறந்த வழி.
* நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
* தவறுகளை ஏற்றுக் கொண்டு உன்னை நீயே திருத்து.  
* பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் தான் இருக்கிறது.
* எந்த சூழ்நிலையிலும் மனஅமைதியை இழக்காதே. .
* கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி.     
* உன் உள்ளத்தில் கடவுள் குடி கொண்டிருக்கிறார்.
* அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.  
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அர்ப்பணிப்புடன் செய்.
* இன்பம், துன்பம், புகழ், இகழ் இரண்டையும் சமமாக கருது.  
* குறிக்கோளை அடைவது யாருக்கும் எளிதானது அல்ல.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
* கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம்.
* தீயவர்களிடமும் நன்மை இருக்கலாம். ஒழுக்க சீலர்களிடமும் தீமை இருக்கலாம்.
* எண்ணம், சொல், செயலில் நேர்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !