எமதர்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1962 days ago
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே உள்ள சென்னாம்பாளையம் எமதர்மர் கோவிலில், புரட்டாசி பவுர்ணமி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது
சிறுமுகை, சென்னம்பாளையத்தில், எமதர்மருக்கு தனியாக கோவில் கட்டி வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும்சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இம்மாத பவுர்ணமி நாளில், எமதர்மருக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகியவற்றால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.