கொடுக்கூரில் 23ல் கும்பாபிஷேகம்
ADDED :4899 days ago
திருக்கனூர்:திருக்கனூர் அடுத்த கொடுக்கூர் அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று 21ம் தேதி காலை 6 மணிக்கு கரிக்கோலம், சுவாமி பிரதிஷ்டை நடந்தது. இன்று 22ம் தேதி காலை 9 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை நிகழ்ச்சி நடக்கிறது.நாளை 23ம் தேதி காலை 6 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியும், 9.30 மணிக்கு அய்யனாரப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.