உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர நாராயணர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை

சங்கர நாராயணர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை

மதுரை : புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு  சங்கர நாராயணர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை அலங்காரம்.

மதுரை   மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில் சங்கர நாராயணர் சுவாமிக்கு  புரட்டாசி   மாத நான்காவது  சனிக்கிழமை  சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா  நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.    

பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து,  சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர். முன்னதாக சங்கர நாராயணர் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சங்கர நாராயணர் சுவாமி, சர்வ  அலங்காரத்தில்  அருள் பாலித்தார்.  ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை  நிர்வாகிகள் பூஜைக்கான  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !