இருக்கன் குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED :1817 days ago
சாத்துார் : இருக்கன் குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ .50 .27 லட்சம் கிடைத்தது.இக்கோயில் உண்டியல்கள் ஹிந்து அறநிலையத்துறை விருதுநகர் உதவி ஆணையர் கணேசன், உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை பூஜாரி அறங்காவலர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் பொருட்களை கணக்கிட்டனர். ரூ .50 லட்சத்து 27 ஆயிரத்து 636 ,224 கிராம் தங்கம் . 525 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.