29 அடி உயர பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :5020 days ago
நெல்லிக்குப்பம்: குமராபுரம் 29 அடி உயர பத்ரகாளி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.குமராபுரத்தில் 29 அடி உயர பத்ரகாளிஅம்மன்கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம், நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து கணபதி முருகன், முத்தாலுவாழிஅம்மன், துர்க்கை மற்றும் 29 அடி உயர பத்ரகாளிஅம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.பூஜைகளை மகாதேவன், நாகராஜ சிவாச்சாரியர்கள் செ ய்தனர். தர்மகர்த்தா வைரக்கண்ணு, சம்மந்தம் கலந்து கொண்டனர்.