தொழில் வளம் பெருக...
ADDED :1864 days ago
தொழிலே தெய்வம் என்பதால் சரஸ்வதிபூஜையன்று ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வழிபடுவர். தொழில் நிறுவனங்களில் இயந்திரம் உள்ளிட்ட கருவிகளையும், வீட்டிலுள்ள அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமிட்டு வழிபடுவர். விஜயதசமியன்று இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.