உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கேதார கவுரி நோன்பு விரதமிருந்து பெண்கள் வழிபாடு

கோவில்களில் கேதார கவுரி நோன்பு விரதமிருந்து பெண்கள் வழிபாடு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று கேதார கவுரி நோன்பு எடுத்தனர். தீபாவளி தினத்தில் நோன்பு எடுப்பவர்கள், அடுத்த தினமான அமாவாசை தினத்தில் கேதார கவுரி நோன்பு எடுப்பவர்கள் என தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு எடுக்கும் நிகழ்வு கோவில்களில் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நோன்பு, கேதார கவுரி நோன்பு நேற்று ஒரே நாளில் வந்ததால் பெரும்பான்மையானவர்களின் வீடுகளில் சைவ தீபாவளியாக கொண்டாடப்பட்டது.காலை முதல் விரதமிருந்து கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தீபாவளி நோன்பை எடுத்தனர். மதியம் 2:00 மணிக்கு அமாவாசை பிறப்பதால் அமாவாசை நோன்பு எடுக்கும் பக்தர்கள் மதியம் 2:00 மணிக்கு மேல் கோவில்களுக்கு சென்று நோன்பு எடுத்தனர்.திருக்கோவிலுாரில் ஆங்காங்கே உள்ள கோவில்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், வீரட்டானேஸ்வரர் கோவில் நவராத்திரி மண்டபத்தில் அம்பாள் ஆவாகனம் செய்யப்பட்டு பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் நோன்பு எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !