உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் பகுதியில் கார்த்திகை சோமவார வழிபாடு

மயிலம் பகுதியில் கார்த்திகை சோமவார வழிபாடு

மயிலம்; மயிலம் பகுதி கோவில்களில் கார்த்திகை மாத சோம வார வழிபாடு நடந்தது. மயிலம் ஆலகிராமத்திலுள்ள திரிபுர சுந்தரி சமதே எமதண்டீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை குருக்கள் சுந்தரமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இது போன்று மயிலம், ரெட்டணை, நெடி, பாதிராப்புலியூர், பெரும்பாக்கம், தென்பசியார் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் சோமவாரத்தை முன்னிட்டு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !