சுந்தரவேலவர் கோயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED :1792 days ago
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த கந்தசஷ்டி விழா 6 ம் நாளான நேற்று காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சுந்தரவேலவருக்கு பாலாபிேஷகம் செய்தனர். சிறப்பு அலங்காரம், தீபாராதனை, துர்க்கை அம்மனுக்கு சக்தி அபிேஷகம் செய்யப்பட்டது. மாலையில் சக்திவேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.