உழைத்து வாழ்ந்திடு
ADDED :1800 days ago
* எறும்பிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள்.
* விதைப்பதற்கு ஒரு காலம் போல விளைச்சலை பறிப்பதற்கும் ஒரு காலம் உண்டு.
* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான். ஏனெனில் முடிவில் வெற்றி கிடைக்கும்.
* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள்.
* கருணையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும்.
* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* ஆணவத்தால் பிறரைத் துன்புறுத்துபவர்கள் முடிவில் சிக்கலில் அகப்படுவர்.
பைபிள்